சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர், நீலாங்கரை, மயிலாப்பூர், சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கும் இடங்களில் தூப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.