சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதாக எஸ்.எம்.எஸ். வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர் முகமது இத்ரிஸின் கோட்டக் மகிந்திரா வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. முகமது இத்ரிஸின் வங்கிக்கணக்கை கோட்டக் மகிந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.