சென்னை: சென்னை சிஎஸ்ஐ டயோசிஸ் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை பேராயத்தின் 38வது மாமன்ற தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது. இதில் சுமார் 250 குருசேகரத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். இத்தேர்தல் சிஎஸ்ஐ பிரதம பேராயர் டாக்டர் ரூபன் மார்க் தலைமையில் நடந்தது. தேர்தலில் சென்னை பேராய உப தலைவராக போதகர் ஜெயசீலன் ஞானாதிக்கம், செயலாளராக போதகர் அகஸ்டின் பிரேம்ராஜ், பொருளாளராக டாக்டர் சாமுவேல் கொர்னெலியஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருகிற 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்து பணியாற்றுவார்கள்.