சென்னை: சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அமலாக்கதுறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அமைந்துள்ள கணேஷ் என்பவர் வீட்டில், பெசன்ட் நகரில் தொழிலதிபர் ரவி ராம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.