Tuesday, May 14, 2024
Home » சென்னையில் தினமும் போக்குவரத்து நெரிசல் போதுமான எண்ணிக்கையில், அனுபவம் வாய்ந்த போக்குவரத்து போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

சென்னையில் தினமும் போக்குவரத்து நெரிசல் போதுமான எண்ணிக்கையில், அனுபவம் வாய்ந்த போக்குவரத்து போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

by Arun Kumar

தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை, ராயபுரம், மண்ணடி, பிராட்வே, பூக்கடை, பாரிமுனை, வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், எம்கேபிநகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான இடங்களில் போதுமான எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் எப்போதும் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வழக்கம். அனுபவம் வாய்ந்த போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்தினால் நெரிசலை எளிதில் சரிசெய்துவிடுவார்கள். போக்குவரத்து துறையில் 10 ஆண்டுக்கு மேலாக வேலை பார்த்தவர்கள், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனால் போக்குவரத்து காவல்துறையில் புதுப்புது காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. மேலும் காலை, மாலை வேளைகளில் குறிப்பாக சென்னையில் தங்கசாலை, ராயபுரம், மண்ணடி, பிராட்வே, பூக்கடை, பாரிமுனை, வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், எம்கேபிநகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறித்த நேரத்தில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் எளிதில் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்துவிடுவார்கள். இதனால் பொதுமக்களின் சிரமம் தவிர்க்கப்படும். புதிதாக பணியில் அமர்த்தப்படும் போக்குவரத்து காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்த போக்குவரத்து காவலர்களை போதுமான எண்ணிக்கையில் தேவையான இடங்களில் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

two + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi