சென்னை :சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,கடலூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.