சென்னை: சென்னையில் தபால் வாக்குப்பதிவு செய்வதில் குளறுபடி என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தபால் வாக்குப்பதிவு செய்வதில் குளறுபடியால் வாக்கு செலுத்தாமல் காவல்துறை அதிகாரிகள் வெளியேறினர். செனாய் நகர் வாக்குப்பதிவு மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு என தகவல் தெரிவித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காவலர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.