சென்னை: தவறான, அவதூறான கருத்து கூறிவிட்டு உடனே மன்னிப்பு கோரிவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? என்று பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு, தேசிய கொடி அவமதிப்பு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய எஸ்.வி.சேகர் மனு அளித்துள்ளார். இரு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.