சென்னை: சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 25 ஏக்கர் பரப்பளவில் 5000 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிக பிரமாண்டமாக அரங்கம் அமைக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு விழா புகழ்பாடும் விழாவாக மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுபடுத்தும் விழா என்று முதலமைச்சர் தெரிவித்தார்.