Friday, May 17, 2024
Home » கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற தாய் : உடலை சூட்கேசில் வைத்து ஓடையில் வீசிய கொடூரம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற தாய் : உடலை சூட்கேசில் வைத்து ஓடையில் வீசிய கொடூரம்

by MuthuKumar

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே இளம்பெண் தன்னுடைய குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை சூட்கேசில் மறைத்து வைத்து ஓடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (19). இவர்களுக்கு 11 மாதமான கலையரசன் என்ற ஆண் குழந்தை இருந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (23) . பிரியாவுக்கும், ஜெயசூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நன்றாக பேசிப்பழகிய இருவருக்கும் ஏற்பட்ட ஈர்ப்பு ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரியா திடீரென தனது குழந்தையுடன் கள்ளக்காதலன் ஜெயசூர்யாவுடன் சென்றுவிட்டார். அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூருக்கு வந்துவிட்டனர். இங்கு ஒரு வாடகை வீட்டில் ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாயார் உஷா மற்றும் கள்ளக்காதலி பிரியா அவரது குழந்தை என அனைவரும் தங்கியிருந்தனர்.

அதேபகுதியில் தான் பிரியாவின் உறவினரான சிலம்பரசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று சிலம்பரசன் திரூர் பகுதியில் வைத்து தற்செயலாக பிரியாவையும், ஜெயசூர்யாவையும் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது, பிரியா முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த சிலம்பரசன் இது குறித்து திரூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உடனடியாக பிரியாவையும், ஜெயசூர்யாவையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு குழந்தையை கொன்றுவிட்டது தெரியவந்தது. பின்னர் குழந்தையின் உடலை ஒரு பேக்கில் வைத்து திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியதாக அவர்கள் கூறினார். இதையடுத்து போலீசார் இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு திருச்சூருக்கு விரைந்தனர்.

அங்கு நடத்திய சோதனையில் ஓடை அருகே குழந்தையின் உடல் வைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்தது. குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்தக் கொடூர கொலையை செய்த பிரியா, ஜெயக்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோரையும் கைது செய்தனர். நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திரூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi