திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊஸ்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர், பெங்களூரில் உள்ள நகைக்கடையில் வேலைப் பார்க்கிறார். இவரது மனைவி மணிமேகலை (42) மற்றும் மகன், மகள் ஆகியோர் புதுப்பட்டினம் பகுதியில் வசிக்கின்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு படிக்கும் தனது மகனது பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் மணிமேகலை வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது, வீட்டின் அருகே பின்தொடர்ந்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், மணிமேகலை கழுத்தில் இருந்த 3 சவரன் தாலிச் செயினைப் பறித்துவிட்டு தப்பிவிட்டனர். இதில் மணிமேகலை, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகேயுள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.