சென்னை: சிபிஐ விசாரிக்கும் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான வழக்கு ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் விசாரணையை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது எனவும் ஆதாரப்பூர்வ விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால்தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.