கரூர்: கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4பேர் இறந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை சீராக செல்கிறது என அரசு தெரிவித்துள்ளது.