சென்னை: காவிரி விவகாரத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழ்நாடு வாகனங்கள் கர்நாடகம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு சரக்கு வாகனங்கள், இதர வாகனங்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர், கோலிபாளையம் வழியாக தாளவாடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.