சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை தொடங்கியுள்ளன. மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும் சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்று அவர் கூறினார்.