புவனேஸ்வர்: ஒடிசாவில் பிற்படுத்தப்படுத்த வகுப்பினரின் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக ஒடிசா மாநிலம், பிற்படுத்தப்படுத்த வகுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று ஒடிசா முழுவதும் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தமுள்ள 208 சாதிகள் உள்ளன. இந்த சாதியினரின் சமூக, கல்வி நிலைமை குறித்து மாநிலம் முழுவதும் வரும் 27ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக, அங்கன்வாடி மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் கணக்கெடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒடிசாவில் சாதிவாரி கணக்கெடுப்பு
previous post