தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். திருப்பூரை சேர்ந்த நவீன் என்பவரை டிசம்பர் 31ல் ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். சமாதானம் ஆனதாக கூறி குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில் ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் நவீன் அளித்த புகாரின் பேரில், இளம்பெண் மரணம் ஆணவக்கொலையா என காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.