சென்னை: சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு, பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது என நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள் என கூறியுள்ளார்.