உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஈஸ்வரகண்டநல்லூர், மட்டிகை, புத்தமங்கலம், நெடுமானூர், அலங்கிரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்றுமுன்தினம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ருவாய் துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கொடியேற்று விழா நடைபெற்றது. இதுகுறித்து அந்தந்த கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் திருநாவலூர் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையங்களில் கொடுத்த புகார்களின் பேரில் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன், செயலாளர் பழனிவேல், பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களை போலீசார் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக அகற்றினர்.