மதுரை: ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் விசாரணை நடத்தாமல் நயினார் நாகேந்திரனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தனது வேட்புமனுவில் தன் மீதான வழக்குகளையும் ரூ.1,500 கோடி சொத்துகளையும் நயினார் நாகேந்திரன் மறைத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.