திருவள்ளூர்: பொன்னேரியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விதிகளை மீறியதாக பாஜக நிர்வாகி இருசப்பன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. அனுமதியின்றி பேனர்கள், கொடிகளை வைத்ததாக பறக்கும் படை அதிகாரிகள் தந்த புகாரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது