கரூர்: கரூர் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற ராமரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். 2012ல் அவனியாபுரம் அருகே வெடிகுண்டு வீசியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கு வந்த போது ராமர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ராமர் வீடு, அனுப்பானடி பேருந்துநிலையப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.