டெல்லி: முதலாளிக்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்துடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, கர்நாடக தேர்தலுக்காக பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கர்நாடகாவில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும் என்று கூறினார்.