புதுடெல்லி: அ.தி.மு.க உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘கட்சி தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அ.தி.மு.க வேட்பாளரை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தை வழங்கவும் வேட்பு மனுவின் படிவம் ஏ மற்றும் பியில் கையெழுத்திடும் அதிகாரத்தை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்புக்கு வழங்கக்கூடாது. மாறாக ஈரோடு இடைத்தேர்தல் போல அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கே படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.