டெல்லி: பிரச்சாரத்தில் ராணுவத்தை பயன்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.