கேமரூன்: கேமரூனில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. கேமரூன் தலைநகரிலிருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டவ்லா நகரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் நிகழ்விடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 40 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காததை அடுத்து 23 பேர் பலியாகினர்.
இதனால் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டவ்லா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கு தரமற்ற கட்டுமானமே காரணம் என முதற்கட்ட ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டட விபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக மதிப்பிடுமாறு கேமரூன் அதிபர் பால்பிகா வீட்டு வசதி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.