புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஜனவரி 31க்கு ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது சுகாதார அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சி.விஜயபாஸ்கர் ஆஜராகாத நிலையில் வழக்கை புதுக்கோட்டைக்கு அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.