செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாஜக உறுப்பினர் நீலகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் நீலகண்டனுக்கு சொந்தமான இருசக்கர வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது.