சென்னை : கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வெழுத அந்தந்த பாட ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்ட பிரசாத், பெற்றோர், ஆசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.