சென்னை: பாஜகவில் தான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார். “பாஜகவில் சேரப் போவதை எல்லாம் பற்றிப் பேசுவதே வீண் செயல், வெறும் 3 சதவீதம் வாக்கு உள்ள பாஜகவுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.