கொல்கத்தா: கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய, பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை மறுநாள் பாஜகவில் இணைய உள்ளதாக, பதவி விலகிய நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று தன்னை பலமுறை திரிணாமுல் காங். சவாலுக்கு அழைத்ததாக அபிஜித் கூறியிருந்தார். திரிணாமுல் காங். சவால் விடுத்ததால், ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று தாய் நினைத்ததாக அபிஜித் கருத்து தெரிவித்துள்ளார்.