Thursday, May 16, 2024
Home » அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்: கரு.நாகராஜன் பரபரப்பு பேட்டி

அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்: கரு.நாகராஜன் பரபரப்பு பேட்டி

by Neethimaan

சென்னை; அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோசமான ஊழல் முதல்வர். ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அதோடு, அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், சொத்துப் பட்டியலையும் வெளியிடப்போவதாக அறிவித்தார். அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது அதிமுக – பாஜ கூட்டணியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை உள்ளது. அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்கள். சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் அபத்தமானது; பேசிய பிறகு அவர் என்ன பேசினார் என்று அவருக்கே தெரியாது. அண்ணாமலையை பொம்மை என செல்லூர் ராஜூ கூறுவது தான் கோமாளித்தனமாக உள்ளது. ஜெயலலிதா மீது பாஜகவுக்கு என்றும் மரியாதை உள்ளது. மாநிலத்தலைவர் அண்ணாமலையில் கருத்தும், தமிழ்நாடு பாஜகவின் கருத்தும் வேறு வேறு இல்லை.

அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம். அப்போது கூட சி.வி.சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை. அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை. பொம்மை தலைவர் அல்ல; தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றியது வருத்தம் அளிக்கிறது. அண்ணாமலை மீது அதிமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்க்கிறோம்; வருத்தப்படுகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரியாக பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை உள்ளது. எடப்பாடி சிறந்த பண்பாளர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இபிஎஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக. ஊழலுக்கு எதிராக எப்போதும் அண்ணாமலை பேசிக் கொண்டே தான் இருப்பார். அவர் செயல்பாடுகளை யாரும் தவறாக சொல்ல முடியாது. கூட்டணி என்பது பொதுவான ஒன்று; கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை. கூட்டணியை முடிவு செய்வது பாஜக தலைமை; கூட்டணியை முடிவு செய்யும்போது மாநில தலைவரிடம் பேசுவர். கூட்டணியில் பெரியண்ணன் வேலையை யாரும் செய்யக்கூடாது. கூட்டணியைத் தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது. கூட்டணியை அதிமுகவினர் மறுபரிசீலனை செய்யட்டும். அதற்கும் பாஜக தலைமையைதான் அணுக வேண்டும். அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

You may also like

Leave a Comment

6 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi