Tuesday, May 21, 2024
Home » பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்

பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்

by Ranjith

பா.ஜ. தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அம்பேத்கர் 134வது பிறந்தநாளையொட்டி, நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் செயல் தலைவர் மறைந்த எச்.வசந்தகுமார் பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நிருபர்களிடம், செல்வப்பெருந்தகை கூறியதாவது :

அம்பேத்கர் எழுதிய சட்ட திட்டத்தை பாஜ சிதைக்க நினைக்கிறது. ஒரு தேர்தல், ஒரு அதிபர் என்ற ஒரு துணிச்சலான வாக்குறுதியை பாஜ கொடுத்து இருக்கிறது. சர்வாதிகாரத்தை அனுமதிக்க முடியாது என்ற தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்க இருக்கிறோம். சர்வாதிகாரத்தை அனுமதிக்கும் தேர்தல் வாக்குறுதியை பாஜ கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்லி வருகிறார்கள்.

அவர்கள் எங்கே அமல்படுத்தியிருக்கிறார்கள்? 10 ஆண்டுக்கள் முன்பாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை ஒன்று கூட நிறைவேற்றாத மோடி அரசு. ஐந்து ஆண்டுகள் முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ. அரசு இப்போது, தமாஷான தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் மயிலை தரணி உள்பட பல கலந்து கொண்டனர்.

* மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகைக்கு தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, சமூக வலைத்தளத்திலும் தனது வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவைக் காப்பதற்கான ஜனநாயகப் போர்க்களத்தில், கழகத்துடன் ‘கை’கோத்துப் பயணித்திடும் அன்புச் சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fourteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi