சென்னை: பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரியும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு யார், யாருக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.