டெல்லி: சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையை விட்டு வெளியே வருவார். தோல்வி பயம் காரணமாகவே அடுத்தடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு கைது செய்து வருகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா உரையாற்றியுள்ளார்.