Friday, May 10, 2024
Home » பாஜகவினர் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை தருவதாக வீரலட்சுமி புகார்: நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

பாஜகவினர் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை தருவதாக வீரலட்சுமி புகார்: நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

by Lavanya
Published: Last Updated on

சென்னை: அண்ணாமலை தூண்டுதலின் பேரில் பாஜகவினர் ஆபாச விடீயோக்களை அனுப்பி தோலை கொடுப்பதாக தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி அளித்துள்ள புகார் மனுவில் பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பண முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியினர் வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தரும் வேளையில் அவர் ஈடுபட்டு வருவதாக வீரலட்சுமி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதால் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் அக்கட்சியினர் 15க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீரலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். மாலினி ஜெயச்சந்திரன் குறித்து தொடர்ந்து புகார் அளித்தும் அண்ணாமலை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ள வீரலட்சுமி. பாஜகவிற்கு அந்த பெண்ணிற்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று வினா எழுப்பியுள்ளார்.

You may also like

Leave a Comment

17 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi