சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டதற்கு புரட்சி பாரதம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தது.