அரியானா: பா.ஜ.க.வுடனான கூட்டணியை ஜே.ஜே.பி. கட்சி முறித்துக் கொள்வதால் அரியானாவில் கட்டார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதால் முதலமைச்சர் கட்டார் இன்று பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவில் பா.ஜ.க., ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் அரியானா துணை முதல்வராக உள்ளார்.