சென்னை: அனுமதி இல்லாத விளம்பர பலகைகள் முற்றிலும் அகற்றப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற ஆணையின்படி விளம்பர பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அனுமதியின்றி விளம்பர பலகைகளை அடியோடு அகற்றுவதே திமுக கொண்டு வந்துள்ள புதிய சட்டதிருத்தத்தின் நோக்கம் எனவும் கூறினார். கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.