டெல்லி: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கேரள ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பு வாதம் தெரிவித்துள்ளது.