சென்னை: பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.