பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் 2 நாள் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டு பீகார் விநியோக கொள்கை 2023 மற்றும் மாநில தொழில் துறை கொள்கையை வெளியிட்டார். இதில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குனர் பிரணவ் அதானி பேசுகையில்,‘‘ பீகாரில், ஏற்கனவே காஸ் விநியோகம், அக்ரோ தொழில் சார்ந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றில் அதானி நிறுவனம் ரூ.850 கோடி முதலீடு செய்துள்ளது. இதில், 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக சிறந்த முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக பீகார் உருவெடுத்துள்ளது. தற்போது மாநிலத்தில் கூடுதலாக ரூ.8,700 கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ’’ என்றார்.