டெல்லி: சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்ததை தொடர்ந்து அகிலேஷ் யாதவை, நிதிஷ்குமார் சந்தித்தார். 2024 மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக அகிலேஷ் யாதவையும் நிதிஷ்குமார் சந்தித்தார்.