பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஆய்வு நடத்தி வருகிறார். முதல்வர் சித்தராமையாவிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவத்தை எடுத்துரைத்தனர். இதைதொடர்ந்து, உயர்மட்ட குழு உடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கர்நாடகா முதல்வர் சந்தித்தார். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.