பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளான இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தது. தேடப்பட்டு வந்த இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுவதற்கு முன்பு சென்னையில் ஒரு மாத காலம் தங்கி இருந்ததாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.