மதுரை : அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையில், உரிய அனுமதி பெற்று பேனர் வைக்கப்பட்டுள்ளதா என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சக்தி சுகுமார குரூப் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் மனு குறித்து ஆட்சியர், மதுரை எஸ்.பி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.