சென்னை: சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தைப் பேறு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி செய்த வழக்கில் 2 திருநங்கைகளை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சாலையில் பாதிக்கப்பட்ட தம்பதி நிற்கும் போது 2 திருநங்கைகள் யாசகம் கேட்கவே, பர்சை திறந்து பணம் எடுக்கும் போது அதில் இருந்த ரூ.66,250 பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்