சென்னை: பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் டிச. 11-ல் வைகோ மனு அளித்திருந்தார். தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக சார்பில் மீண்டும் பிப்.5-ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்து பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வைகோ மனு அளித்துள்ளார்.