அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் தமது தலைமையில் நடைபெற்ற பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். ராம் லல்லா கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.