சென்னை: அயனாவரம் பேருந்து பணிமனை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று முன்தினம் பேருந்து பணிமனை அருகே கண்காணித்த போது, பெண் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், புரசைவாக்கம் திடீர் நகர் பிரிக்ளின் சாலையை சேர்ந்த கலை (32) என்றும், கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பெண் கஞ்சா வியாபாரி கலையை கைது செய்தனர்.